கருணாநிதி - கருணை நதி


மத்திய அரசின் உணவு பாதுகாப்பு சட்டத்தின் விதிமுறைப்படி லைசென்ஸ் பெறுவதற்கு கடைசி நாள் இன்று. இந்த விவரம் அறிந்ததும் தானைத்தலைவர் முத்தமிழ் வித்தகர் அரசியல் சாணக்கியர்... இன்னும் பல "ர்" களுக்கு தகுதியானவர் மத்திய அரசின் இந்த சட்டத்தில் திமுக விற்கு மனதளவில் சம்மதமில்லை என்றும் இச்சட்டத்தினால் சுண்டல் விற்பவர்முதல் சிறுவியாபாரிகள்வரை பாதிக்கப்படுவார்கள் எனவே மத்திய அரசு இச்சட்டத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். சிலரைவர்தகத்தில் அன்னிய முதலீட்டால் பாதிக்கப்படப்போகும் சிறுவணிகர்களின் நலனை கூட்டணீ தர்மம் என்ற அடைமொழியோடு அடகு வைத்தவர் உணவு பாதுகாப்பு சட்டத்தால் சிறுவியாபார ஆடுகள் நனையப்போவதற்காய் (ஓனாய்) கண்ணீர்வடித்திருக்கிறார். ஒருபுரம் மக்கள் நலன் கருதாமல் நடந்துகொள்ளும் காங்ரஸ் கடுப்பை கிளப்புகிறதென்றால், மக்களை முழுமுட்டாள்கள் என நினைத்துக்கொண்டு நாளொரு பேச்சும் பொழுதொரு அறிக்கையுமாய் இவர்வேற வெறுப்பேத்துறார்.

Comments