ஆடி தள்ளுபடி - ஆள் தேடி கொள்ளையடி.

ஆடி கொள்ளையர்களிடம் அகப்பட்ட அடிமைகள்.

ஆடி தள்ளுபடி என்பது கடந்த 10-12 ஆண்டுகளாகத்தான் அதகளப்படுகிறது. குறிப்பாக உலகமயமாக்கப்பட்ட, தாராளமயமாக்கப்பட்ட பொருளாதார கொள்கைக்குப்பின்தான் என்றால் சரியாக இருக்கும். ( ஆமா எல்லாத்துக்கும் தாராளமயமாக்கலை கை காமிச்சிட்டா பெரிய அறிவாளின்னு நினைப்பா?). ஆடித்தள்ளுபடியில் 50% 60% 70% என தள்ளி தள்ளி 0% வட்டி என்பதுபோல் 100% தள்ளுபடியும் வரப்போகும் காலம் தொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது. என்ன பேக்கிங் சார்ஜ், சர்வீஸ் சார்ஜ் என தலைக்கு 1000 ரூ தனியாக வசூலிக்கக்கூடும். இப்பவே ரிலையன்ஸ் போன்ற தனிப்பெரும் கடைகளில் பிளாஸ்டிக் பைக்கு தனியாக பணம் கேட்கின்றனர். 

மற்ற எல்லா துறைகளைவிட ஜவுளித்துறைதான் ஆடித்தள்ளுபடியில் நடுத்தரவர்க்க குடும்பங்களை ஆட்டிப்படைக்கிறது அல்லது ஆதிக்கம் செலுலுத்துகிறது  என தோன்றுகிறது. பொதுவாய் அடித்தட்டு மக்களை இந்த ஆடி அண்டுவதில்லை. காரணம் அவர்கள் எதையும், தன் அத்தியாவசிய தெவைக்களுக்குக்கூட யோசித்தே செலவு செய்கிறார்கள். அவர்களின் வருமானம் அதைத்தான் அனுமதிக்கிறது. அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறைதான் துணி எடுக்கிறார்கள் அது தீபாவளி அல்லது பொங்கல். நடுவுல எடுக்கிறாங்கன்ன அவங்க உடுத்தியிருக்கும் துணி இனி உடுத்தவே முடியாதுங்கற சூழ்நிலையாத்தான் இருக்கும். அப்பவும் அன்னிக்கு அவன் கையில் உள்ள தொகையில் வாங்கக்கூடியதை மட்டுமே அவன் தேர்ந்தெடுக்கிறான். அவனுக்கு louis philippe, wrangler, Lee இது எதுவும் தெரியாது தேவையுமில்லை. அவனின் தேவைஎதுவோ அதன் சந்தை அவன் அறிவான். அவன் வாழும் வாழ்க்கை சூழலும் பணிச்சூழலும் அவனிடம் அதைத்தான் எதிர்பார்க்கிறது. இது ஜாதிசார்ந்த ஒரு சமூக கட்டமைப்பினால் உருவாகி இருந்தாலும், பொருளாதாரமும் ஒரு காரணமே.

அடுத்து உயர்தட்டு மக்கள். அவர்களுக்கு ஆடிபற்றியோ அமாவாசைபற்றியோ எந்த கவலையும் இல்லை, அக்கறையும் இல்லை. நினைத்த நேரத்தில் நினைத்த பொருளை வாங்கக்கூடிய ( அது 6000 மோ 60,000 மோ ) பொருளாதாரத்திலும், மனநிலையிலும் வாழக்கூடியவர்கள். KFC யும், Pizza Cornar ம் அவன் டீ சாப்பிடும் இடங்கள். அங்கே அவன் தள்ளுபடிகளை எதிர்பார்த்து போவதில்லை. ( 75ரூ பிரண்ஸ் பேக் என்றும், வெறும் 44 ரூ மட்டுமே என்றும் விளம்பரத்தை பார்த்தபின்தான் அவற்றில் நடுத்தரமக்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது )

நடுத்தரவர்க்கம் அல்லது ரெண்டுங்கெட்டான். இவன் வாழும் முறையிலும் மனோபாவத்திலும் ஒரு ரெண்டுங்கெட்டானாகவே இருக்கிறான். இருப்பது போதும் என்று இருந்துவிடுவதும் இல்லை, பறக்கத்தான்செய்வேன் என உறுதிகொள்வதும் இல்லை. கையேந்திபவனுக்கும் சரவணபவனுக்கும் இடைபட்ட டீ கடையில் உக்கார்துகொண்டு le meridien  ஐயும் park sheraton னையும் தின்றுகொண்டிருப்பவன். தான் உயர்தட்டு மக்களுக்கு எந்தவிதத்திலும் சளைத்தவனல்ல என நிருபிக்க நடை உடை பாவனைகளில் அவனைப்போலவே நடந்துகொள்பவன். அதற்காக தன்னால் இயன்றதையும் இயலாததையும் செய்யத்துணிபவன். மேல்தட்டு மகக்களைபோல் இருக்கவேண்டும் என்பதற்காய் அவர்களைப்போலவே சிறந்த பிராண்டட் சர்ட்டுக்களையும், பேண்ட்டுக்களையும் வாங்குவார்கள், பிசாவையும் பர்கரையும் தொண்டை அடைக்க அடைக்க தின்று தொலைப்பார்கள். பக்கத்து நாடார் கடைகளில் வாங்கிக்கொண்டிருந்த மளீகை பொருட்களை சூப்பர்மார்கெட்டுகளில் வாங்குவார்கள். வங்கிகணக்கை ICICI, HDFC என பன்னாட்டு வங்கிகளில்தான் தொடங்குவார்கள். இவை எல்லாம் அவர்களுக்கு தங்களின் கவுரவத்தோடு தோடர்புடையதானவைகளாக உள்ளன. இவர்களின் வரட்டுத்தனத்தை பயன்படுத்தி மேல்தட்டு மக்களால் நிராகரிக்கப்பட்ட அல்லது அவர்கள் ரசனையிலிருந்து விலகிவிட்ட வடிவமைப்புக்களை ஆடியில் தள்ளுபடி விலையில் இவர்கள் தலையில் கட்டுகிறார்கள்.

இப்படியாக ஆடிக்களிக்கும் ஆடி நேற்றோடு ஓய்ந்தது.












Comments