நசுக்கப்பட்ட ஆயுதம்

இலங்கையில் நிகழ்ந்த இனபடுகொலைகளுக்கும், மனித உரிமை மிரல்களூக்கும், போர்குற்றங்களூக்கும் என எல்லா காயங்களுக்குமான களிம்பு அமெரிக்க தீர்மானம்மட்டுமே என்பதுபோல் பாவலாகாட்டும்  தமிழக அரசியல் நிகழ்வுகள் சகிக்கக்கூடியதாய் இல்லை. மத்திய அரசின் வெளியுறவு கொள்கையும் புதுமனைவி செய்துவைத்த நூடில்ஸ்போல் பாதி வெந்தும் மீதி நொந்தும் என புரியாத புதிராக இருக்கும் நிலையில் இனி எந்த அரசியல் கட்சிகளின் வாய்ஜாலங்களும் இலங்கையில் எஞ்சியுள்ள தமிழர்களுக்கு உதவப்போவதில்லை என தீர்மானித்த லயோலா கல்லூரி மானவர்கள் போற்றத்தக்கவர்கள். சமீப காலங்களாக தமிழகத்தில் எந்த ஒரு பிரச்சனையிலும் மக்களிடம் அரசியலற்ற எதிர்ப்புத்தன்மையற்ற நிலை காணப்பட்டுவந்த நிலையில் மாணவர்களின் உண்ணாவிரதம் தமிழக மக்களிடம் குறிப்பாக இளைஞர்களிடம் ஒரு எழுச்சியை உருவாக்கத்தொடங்கியது. மாணவர்களின் இந்த போராட்டம் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவாகவும் எந்த கட்சியின் ஆதரவாலும் மேற்கொள்ளப்படவில்லை என தெளிவாக அறிவித்திருந்ததே ஒட்டுமொத்த மக்களின் உணர்வுகளும்கூட இந்த மாணவர்களின் உண்ணாவிரதத்தால் ஒருமுகப்படவைத்தது என கூறலாம்.  டில்லி மாணவி பலாத்கார நிகழ்வில் மாணவர்கள் வீதிக்கு வந்து தங்கள் எதிர்ப்பைக்காட்டினர். அது நாட்டின் அத்தனை மீடியாக்களிலும் ஒளிபரப்பப்பட்டு பாலியல் கொடுமைகளுக்கு எதிராய் ஒரு முக்கியத்துவத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்த மாணவர்கள் தங்கள் எதிர்ப்பை உண்ணாவிரதம் என்னும் அறவழியில் வெளிப்படுத்தியதால் இது தமிழகத்திற்குள் மட்டுமே பேசப்பட்டு அது ஓருமுகப்படுவதற்கு முன்பாகவே முனைமுறிக்கப்பட்டடுவிட்டது. உண்ணாவிரதமிருந்த மாணவர்களை நள்ளிரவில் கைது செய்தது மூலம் அறவழிப்போராட்டங்கள் அவைக்குதவாது என தெளிவாக்கி இருக்கிறது அரசு.

தமிழகத்தில் மாணவர் சக்தி எத்தகையது என்பது இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் இந்தியா கண்டதுதான். ( அதனால் ஒரு தலைமுறையே இந்தி தெரியாமல் தவிக்கிறது என்பது வேறு ) அத்தகைய சக்கிவாய்ந்த ஆயுதம் இலங்கை பிரச்சனையை கையில் எடுத்தாலோ, அதற்கு மக்கள் ஆதரவு கூடினாலோ இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடகூடும் அபாயம் இருப்பதால்தான் இந்த மானவர்கள் போராட்டத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். இந்த போராட்டம் மட்டுமல்ல அரசு மற்றும் அரசியல் வாதிகள் தங்கள் நலனுக்கு எதிராய் எழும் எந்த போராட்டத்தையுமே அப்புறப்படுத்திவிடுவார்கள்.

Comments

  1. உண்மைதான்! மாணவர் சக்தி எழுச்சி மிக்கது! நன்றி

    ReplyDelete
  2. யதார்த்த நிலை சொல்லும் அருமையான பதிவு
    வாழ்த்துக்கள்

    ReplyDelete

Post a Comment