ஆண்களோடு பெண்களும்

  
ஓவியம் M.F.Hussin 
உதவி : Google

தெய்வமாயும், சக்தியாயும், ஆற்றலாயும் போற்றப்படும் பெண்கள், வெறும் காட்சிப்பொம்மையாகவும், அழகு பதுமையாகவும் மட்டுமேவாகவும் பார்க்கப்படுகிறார்க‌ள். இந்த மனோநிலை எல்லா தேசங்களுக்கும் பொருந்துவதாய் உள்ளது. ஆணும் பெண்ணும் சமம் என்பதைகாட்ட அர்தனாரியாய் அவதரித்துக்காட்டினாலும், தூய்மையான உள்ளம் மட்டுமே இறைவனின் ஆலயம் எனக்காட்ட கன்னியின் வயிற்றில் அவதரித்துக்காட்டினாலும் கடவுளை ஏற்றுக்கொண்டவர்களும் அதன் தத்துவத்தை போற்றுபவர்களுமேகூட இக்கருத்தில் விலகியே இருக்கின்றனர். நாகரீகம் வளர்ந்திராத கற்காலத்திலுமேகூட ஆண் பெண் ஆதிக்கம் பேணப்படவிலை. வேட்டைச்சமூகமாய் வாழ்தவர்களுக்குக்கூட தாம் ஒருவரின்றி ஒருவர் வாழ்துவிடமுடியாது என்பதும், இதில் யார் பெரியவர் என்பதில் அர்தமில்லை என்பதும் தெரிந்தே இருந்திருக்கிறது.

ஆனால் நாகரீகவளர்ச்சியின் உச்சத்தில் வாழ்வதாய் மாரடித்துக்கொள்ளும் இன்றைய சமூகம் பேணூவதெல்லாம் பெண்ணடிமைத்தனமும், வன்கொடுமைகளையுமே. இன்றைக்கு பெண்விடுதலை, மாதர் சங்கங்கள் என்பனபற்றி ஆரம்பித்தாலே" அட போங்க சார்.. அதெல்லாம் அந்தக்காலம் இப்பெல்லாம் அந்தவார்த்தைக்கேகூட அவசியமே இல்லை "என்று வாய்கிழிய பேசுபவர்களுமே தங்கள் வீட்டுப் பெண்களை சுதந்திரமாய் இருக்கவிடுவதில்லை. ஒரு பிரபல TV நிகழ்ச்சியில் உங்கள் மனைவி வீட்டில் மேற்கொள்ளும் காரியங்களுக்கு எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என்ற்தற்கு 3000 என்கிறார். ஆக அவர்பார்வையில் மனைவி ஒரு ஊழியர் அவ்வளவே. நான் சம்பாசிட்டுவந்து கொடுகறேன் நீ அதுக்கான வேலையை செய்யறே அவ்வளவுதான். ஒரு முதலாளியின் மனநிலை. அந்த நிகழ்ச்சியை பார்க்கையில் மன்ம் மிகவும் வேதனைப்பட்டது.

ஆண்களோடு பெண்களும்
சரிநிகர் சமான‌மாய்
வாழ்வமிந்த நாட்டிலே - பாரதி.

 கனவுகளோடு எழுதிவைத்தாய், கனவாகவே நீடிக்கிறது.


Comments