ஜல்லிக்கட்டு - சில்லி டாக்கு

கடந்த சில வருஷமா பொங்கல் பண்டிகை வருகிறதோ இல்லையோ,  ஜல்லிக்கட்டு வேண்டுமா? வேண்டாமா? நடக்கலாமா? கூடாதா? இது தமிழர்களின் கலாச்சாரமா? மிருகங்கள்மேல் காட்டும் வன்முறையா? ( ஸ்..ப்பா எத்தனை கேள்வி. ) என ஜல்லியடிக்கர்தே வேளையாப்போச்சு.  ஜல்லிகட்டு நடத்துவதற்கும் நடத்தக்கூடாததற்கும் பல காரணங்கள் இருக்கு உண்மைதான். ஜல்லிக்கட்டை ஆதரிப்பவர்கள் அதை தங்களளோட‌ கலாச்சாரத்தோடும், வீரத்தோடும், விளையாட்டோடும் சம்மந்தப்படுத்திப் பார்க்கிறாங்க. எதிர்ப்பவர்கள் அதை வன்முறையோடும் மிருகங்கள்மேல் காட்டும் காட்டுமிராண்டித்தனத்தோடும் சம்மந்தப்படுத்தி வாதாடுறாங்க.

கால்நடைகளை துன்புறுத்தக்கூடாதுங்றதுல யாருக்கும் மாற்றுகருத்து கிடையாது. ஆனால் இதை தமிழர்கள் வீரத்தோடும் கலாச்சாரத்தோடும் சம்மந்தப்படுத்தும்போது அவர்களின் வாதத்தில் வலுசேர்கிறது. ஜல்லிக்கட்டில் காளையை அடக்குறவனுக்குத்தான் என் பெண்ன கொடுப்பேன்னு சொன்னவங்களெல்லாம் தமிழ்ச்சமூகத்தில் இருந்திருக்காங்க அதை மறுக்கமுடியாது. 

மழை நாட்களில் சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீர் குட்டைகளை காலில் சேறு படாமல் லாவகமாய் தாண்டிச்செல்வதும், தாண்டிச்செல்ல முயற்சிப்பதும் பெரிய சாகசம்தான். அப்படி சில நேரங்களில் தாண்டிபோய்ட்டால் ஏற்படக்கூடிய மகிழ்ச்சியும், பெருமிதமும் வார்த்தைகளில் சொல்லிவிடமுடியாது. ஜல்லிக்கட்டு கூடாது என கோஷம் எழுப்பும் மேட்டுக்குடிக்கு மகிழ்ச்சி, சந்தோஷம், திருப்தி என எல்லாமே பணம் சார்ந்தும், தன் வாழ்க்கைநிலையும் அதன் உயர்வும் மட்டுமே சார்ந்த விஷயங்கள்தான். இவர்கள் குட்டையை எதுக்கு தாண்டணும் அதானால யாருக்காச்சும் லாபமிருக்கா, ஒருவேளை கையை காலை உடைஞ்சிட்டான்னு யோசிச்சிகிட்டே ஓரமா போய்டுவாங்க இல்லைனா சேத்தை மிதிச்சிட்டே போய்டுவாங்க. ஆனா ஆனால் மகிழ்ச்சியை உணர்வுகளோடு தொடர்புபடுத்தி பார்ப்பவர்கள் கீழ விழுத்துட்டாலும் சிரிச்சுகிட்டே போய்டுவாங்க‌. இதுக்கே இபடின்னா திமிரிகிட்டுவர காளையை அதன் செதிலை பிடிச்சுகிட்டு அதோட‌வேகத்துலயே ஓடி சில நேரத்துல இடறி அது கால்லயே விழுந்து அடிபட்டு யப்பா.. என்ன திரில்லிங். காளையை அடக்கறானோ இல்லையோ அடுத்த ஜல்லிக்கட்டுவரைக்கும் அந்த சம்பவம் பேசப்படும். அவன் ஊருல அவந்தான் நாயகன். அவன் காயங்கள் போற்றப்படும்.  இதுதாய்யா எங்க மகிழ்ச்சி. சச்சின் 100 அடிச்சா வீட்டுக்குள்ளேயே துள்ளி குதிக்கிறீங்களே அதுல உங்க பங்கு என்ன? நாங்க அப்படியில்ல நேரடியாய் களத்துல நிற்போம், கூட நாலுபேரும் நிப்பாங்க அதுதான் வீரம், அதுதான் விளையாட்டு...

இந்தவருடமும் நீதிமன்றத்தின் 72 நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்தப்படும் என தெரிகிறது, மகிழ்ச்சி.





Comments

  1. ஜல்லிக்கட்டு ஒரு பாரம்பரிய விளையாட்டு.காலத்திற்கேற்ப சில வரைமுறைகளை கடைபிடிப்பது நல்லதுதான்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான். நீதிமன்றத்தின் 72 விதிகளும் கடைபிடிக்கத்தான்படுகின்றன. மேலும் மேலும் அழுத்தம் கொடுத்து அந்த ஆட்டத்தையே இல்லாமல் ஆக்கிவிட நினைக்கிறார்களே அதுதன் வருத்தம்.

      Delete
  2. Did you saw the live on jallikattu. it was so good with local people commentary.

    " yeh indapa mattu vala pidikathega , yeh pidi madu illa, okkali melainthu iranguda,

    yeh manja banian vangava vanthinga , matta pidigakappa,"

    really enjoyed

    ReplyDelete

Post a Comment