நாம்


வாழ்க்கையை வளர்த்துகொண்டிருக்கிறோம்
சுவர்களுக்கு மத்தியில்,
ஒவ்வொரு நாளும் வீணாகிக்கொண்டிருக்கிறது
இறக்கப்போகும் வில‌ங்கை வளர்க்கவேண்டி,
தவறான வழிநடத்தல்களால்
தொலைத்து நிற்கிறோம் பால்யத்தை,
குழப்பத்தின் எல்லையில் அமர்ந்தபடி
பிரஸ்தாபித்துக்கொண்டிருக்கிறோம்
தெளிவின் அருமைகளை.

Comments