ஆயுத‌ம் செய்வோம் !

 வளர்ந்த நாடுகளாக, வல்லரசாக அறியப்பட்டவைகளும், அறிவித்துக்கொண்டவைகளும் உண்மையில் எவ்வாறு வல்லரசாயின அல்லது அவ்வாறு அறியப்படுகின்றன. பொதுவாக வீட்டோ அதிகாரம் பெற்ற நாடுகளே ( அமெரிக்கா, ரஷ்யா, சீனா, இங்கிலாந்து, பிரான்ஸ் ) ( இப்போது பொதுவாய் அமெரிக்க மட்டுமே வல்லரசு என பொதுபுத்தி வந்துவிட்டது )வல்லரசுகள் என அறியப்படுகின்றன. இரண்டாம் உலகப்போருக்குப்பின் வெற்றிபெற்ற நாடுகளான இவற்றிற்கு வீட்டோ அதிகாராம் வழங்கப்பட்டது. இந்த அதிகாரத்தை அவர்களே தங்களுக்கு வழங்கிக்கொண்டனர் என்பதுதான் நிஜம். வீட்டோ அதிகாரம் என்பது தடுத்து நிறுத்தும் அதிகாரம் எனப்பொருள்படுகிறது (எதை என்பது அந்தந்த தேசத்தின் சொந்த விறுப்பு வெறுப்புக்கு உட்பட்டது).  இரண்டாம் உலகப்போரில் மேற்கூரிய நாடுக‌ளின் பங்களிப்பு அவற்றின்மேல் ஒரு நம்பகத்தன்மையையும் கூடவே பயத்தையும் ஏற்படித்தியிருந்ததுவே (இது என் எண்ணம்)இதற்கு முக்கியகாரணம் எனக்கொள்ளலாம். மேலும் இன்றைய வல்லரசு என்பதற்கு அந்த நாட்டின் ஆயுதபலத்தையும் ராணுவத்திற்கு செய்யும் செலவுகளுமே கணக்கிலெடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்த வகையில் பார்த்தால் உலகின் பெரும்பகுதி கடல் வெளியிலும் அமெரிக்காவின் தளவாடங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. அதுதவிர கூட்டு ராணுவ பயிற்சி என்ற பெயரில் இந்நாடுகள் தங்கள் ராணுவத்தை பல தேசங்களில் நிறுத்தியுள்ளது. குறிப்பாக அரபு தேசங்களில்.

இந்நிலையில் இந்தியா வல்லரசாவது எவ்வாறு சாத்தியம். ந‌ல்ல‌வ‌னாக‌ அறிய‌ப்ப‌ட‌வேண்டுமானால் ந‌ல்ல‌வைக‌ள் செய்திருக்க‌வாண்டும், தாதாவாக‌ அறிய‌ப்ப‌ட‌வேண்டுமானால் ஆள்ப‌லம், ஆயுத‌ப‌ல‌ம் நிறைந்திருக்க‌வேண்டும். இல்லையெனில் வ‌டிவேலு ஒருப‌ட‌த்தில் செய்வ‌துபோல் நான்ர‌வுடி, நான்ர‌வுடி என்று த‌க்குத்தானே சொல்லிக்கொண்டு போலீஸ் ஜீப்பில் ஏறிஉட்காறுவ‌தைப்போல் இதோ வ‌ல்ல‌ர‌சாயிடுவோம் அதோ வ‌ல்ல‌ர‌சாயிடுவோம் என‌ சொல்லிக்கொண்டு திரிய‌வேண்டிய‌துதான்.  


Comments