வருத்தத்திற்கு வருந்துகிறோம்


பெட்ரோல் 5 ரூபாய் விலையேற்றம் நேற்று நள்ளிரவிலிருந்து அமலுக்கு வந்தது நேற்றுமாலைமுதலே பங்க்குகளில் நல்ல கூட்டம். நான் பார்த்தவரை 90% பங்குகளில் இரண்டுசக்கர வாகணங்களே நிரம்பிவழிந்தன. ஒவ்வொரு 2 வீலரும் 5 லிட்டர்  பெட்ரோல் போட்டிருந்தாலும் ஒரு நபருக்கு 25 ரூபாய் சேமிப்பாக இருந்திருக்கும் ஆனால் பெரும்பாலான பங்குகளில் ஒரு வண்டிக்கு 1 லிட்டர்தான் என்றும் அல்லது 100 ரூபாய்க்குத்தான் என்றும்தான் பெட்ரோல் போடப்பட்டது.இதனால் மக்கள் பெரிதும் எரிச்சலுக்கு ஆளாயினர். விலையேற்ற்த்தை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையால் தனிநபரின் சேமிக்கமுடியாமை சொற்பமாய் இருந்தாலும் பங்க் அதிபர்களுக்கு பழையவிலைக்கு கூடுதலாய் 5 ரூபாய் என்பது பெறும் லாபம்தானே? இதையாரிடம் சொல்லி வருந்துவது.

Comments