ஒரு காட்சி கதை சொல்கிறது


500 எபிசோடுகள் இழுக்கக் கூடிய சீரியலின் கதையை 1 காட்சியில் சொல்ல முயற்சித்திருக்கிறேன்.


அருண் நீ பண்றது தப்புன்னோ ரைட்டுன்னோ நான் சொல்லமாட்டேன். ஏற்கனவே ஒருத்தனை காதலிச்சு அவன் மூலமா கர்பமான என்னை நீ லவ் பண்றேன்னு சொல்றது சரியா தப்பா எனக்குத் தெரியலை. ஆனா நடைமுறைக்கு ஒத்துவருமாங்கற‌துதான் முக்கியம். நீ பலமுறை சொல்லியிருக்க "எங்கவீட்டப் பொருத்தவரை  மனுஷங்களோட மனசுதான் முக்கியம் அவங்க வரலாறு கிடையாது"ன்னு, ஆனா வரலாறு தன் குடும்பத்தையோ, குடும்பத்தோட IMAGEஐ யோ பாதிக்கும்போதுதான் மனசுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பாங்க‌ன்றது தெரியும். நீ என்னை லவ் பண்றது உங்க வீட்டுல தெரிஞ்சா உங்க அக்கா பசங்க‌ வேணும்னா "ஆண்டி ஆண்டி"ன்னு பழையபடியே அன்பா இருக்கலாம் ஆனா "அம்மா.. பிரியா"ன்னு அன்பா கூப்பிடற உங்க அம்மா "ஏண்டி புள்ளத்தாச்சியா இருக்கியே பாவம்னு வீட்டுல பாதுகாப்பு கொடுத்தா ஏம்புள்ளயவே வளைச்சுப்போடப்பாக்க‌றயா? இந்த சாமர்த்தியத்தை உன்னை கலைச்சுட்டு போனானே அவன்கிட்ட காட்டவேண்டியதுதானெ?"னு வாய்க்குவந்தபடி திட்டத்தொடங்கிடுவாங்க.

OK எங்கம்மா அப்படிப்பட்டவங்க இல்லைன்னு நீ சொல்லலாம் அது உண்மையாவும் இருக்கலாம் but அவங்க உள்மனசுல நம்ம புள்ள வாழ்க்கை இப்படி ஆய்டிச்சேங்கற வேதனை கண்டிப்பா இருக்கும். உங்க மாமா பொண்னு மேலோட்டமா உன்னை திட்டிகிட்டும், கிண்டல் பண்ணிகிட்டும் இருந்தாலும் அவ உள்மனசுல உன்னை நினைச்சு உருகிட்டு இருக்கலாமில்லையா? சீ..சீ அவ சின்னபொண்னுன்னு நீ சொல்லலாம், ஆனா அவ சின்ன பொண்ணில்லை அருண் உங்க family ஆல்பத்தை பாக்கும்போதெல்லாம் அவ உன் போட்டோவைத்தான் உத்து உத்து பாக்கறா. அது உனக்கு எப்படி வேணும்னாலும் இருக்கலாம் ஆனா என்னைப்பொருத்தவரைக்கும் அவ உன்னை love பண்றான்னுதான் தோணுது. இது அதீத கற்பனையாக்கூட இருக்கலாம் but அது நிஜ‌மா இருந்தால் இதுவரை அன்பா "பிரியாக்கா.. பிரியாக்கா"ன்னு கூப்பிட்டவ அடியே ப்ரியா எனக்கே வேட்டுவெச்சிட்டியான்னு என் முடியைபுடிச்சு உலுக்கலாம். எல்லாத்துக்கும்மேல‌ உங்க அப்பா, "உன்னை எம் பொண்ணுமாதிரி நினைச்சேனே நீயே இப்படிப் பண்ணிட்டியே"னு கேக்கமாட்டார் அதைவிட sharp ஆ ஒரு பார்வை பார்ப்பாரே அந்த பார்வையிலேயே ஆயிரம் கேள்வி இருக்கும் அதுக்கு நான் என்ன பதில் சொல்வேன் சொல்லு அருண். 

அப்போ உனக்கு என்மேல கொஞ்சமும் இஷ்டமில்லையா?ன்னு நீ கேக்கநினைப்பது புரியுது. இஷ்டபடுவதற்கும், இஷ்டபடாததற்கும் வேண்டிய தகுதி என்கிட்ட இல்லை அருண். eligibility பத்தி பேச இது என்ன vacancy யா? வாழ்க்கை அதானே சொல்லப்போற வேண்டாம் விட்டுடு. நீ என்னை காதலிப்பதாலோ, கல்யாணம் பண்ணிக்கற்தாலையோ எனக்கு ஒரு புருஷன்  கிடக்கலாம், என் குழந்தைக்கு ஒரு அப்பாக்கூட கிடைகலாம் but அப்படி ஏதாவது நடந்துட்டா என்மேல பாசமா இருக்கும் இந்த குழந்தைகள், என்னை அக்கரையா கவனிச்சுக்கற உங்க அம்மா, அப்பா, தன் பொண்ணுமாதிரியே என்னையும் பாத்துக்கற உங்க மாமா மாமி இவங்க அத்தனை பேரோட அன்பையும், ஆதரவையும் இழக்கவேண்டியிருக்கும் அருண் . 

உன்னோட வாழும் சந்தோசமான வாழ்க்கையைவிட இந்த குடும்பத்தோட அன்பும், அரவணைப்பும் எனக்கு போதும் என்னை மன்னிச்சிடு அருண் பிளீஸ்.

உங்கள் கருத்துக்களை பகிரவும்.

   

Comments