கனியிருப்ப காய்...

மன்மதன் அம்பு கமலின் கவிதை சர்ச்சைக்குள்ளாகி படத்திலிருந்தே நீக்கப்பட்டுவிட்டநிலையில் அது நீக்கப்படவேண்டி எழுந்த கோரிக்கையின் பின்னனி முழுமையாக யாருக்கும் விளக்கப்படவில்லை அல்லது
வெகுஜனமக்களுக்கு கமல் எனன எழுதினார்? ஏன் எழுதினார்? எதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள்? என்பது புரியவில்லை.அதைபுரிந்துகொள்ள முயற்சிப்போம்.

அடிப்படையில் இது சினிமாவுக்காக எழுதப்பட்ட கவிதை அந்த கவிதையை படத்தோடு பார்க்கையில்தான் கவிதைக்கான காரணம் விளங்கும்.நம் விருப்பத்தை தெரிந்துகொள்ளாமலேயே! அந்த வாய்ப்பு நமக்கு மறுக்கப்பட்டுவிட்டது என்பது வேறுவிஷயம்.  எதிர்ப்புக்குகாரணம் பெண்களை இழிவுபடுத்தினார் என்பதா? கடவுளை வம்புக்கிழுத்தார் என்பதா? தெரியவில்லை,எனவே இரண்டையும் பார்ப்போம்.

இயல்பாகவே இக்கவிதை பெண்களை இழிவுபடுத்துவதாய் கருதப்படுவதற்கு அதில் உள்ள ஆடைகளைகயில், காமம், குறியென்றான பின், முன்னும் பின்னும் ஆட்டும் சகடை, ஆணுறை
எனற இரட்டை அர்த்த வார்த்தைகள் ஒரு பெண் வாயிலிருந்து வருகின்ற காரணத்தால் அது கொச்சையான வார்த்தைகளகவே தோன்றக்கூடிய வாய்ப்புள்ளது. அதனாலேயே அதிலுள்ள முதல் அர்த்தத்தையும் ஆதங்கத்தையும் யாரும் புரிந்துகொள்ள முயற்ச்சிக்கவில்லை. கனியிருப்ப காய் கவந்தற்று வேறென்னசொல்ல!
பெண்களை இழிவுபடுத்துவதாகயிருந்தால் கவிதையின் முதற்பாதியை ஒரு பெண் வாசிப்பதாயும் மறுபாதியை ஆண் வாசிப்பதாயும் அமைத்திருக்கவேண்டியதில்லை என்பது என் கருத்து.

பெண்வாசிப்பதாய் அமைந்த வரிகளில் பெண்கள் பற்றி ஆண்களின் கணிப்புக்களும், கவனிப்புக்களும் இப்படியானவையாகத்தான் இருக்கிறது என்ற ஒரு பெண்ணின் ஆதங்கம்தான் மெல்லிய கேலியாய் அமைந்துள்ளது. பெண்களை அவ்வாறான கண்ணோட்டத்தில் பார்க்கும் ஆண்களுக்கும்,அவ்வாறான கண்ணோட்டத்தால் பாதிக்கப்ப்ட்ட பெண்களுக்கும் அந்த கேலியும்,வலியும் நிச்சயம் புரியும். அந்த கெலியையும் ஆதங்கத்தையும் தன் voice modulation மூலம் மிக அழகாய் நேர்த்தியாய் வெளிப்படுத்தியிருக்கிறார் திரிஷா. அதை உணர்ந்துகொண்டவர்கள் சமூகத்தில் ஆண்களால் பெண்களுக்கு ஏற்படும் அவலம் கருதி வெட்கப்படுவர். இப்படி வெட்கப்பட்டு தலைகுனிவதை தவிற்க்கத்தானோ என்னவோ கவிதையையே தடைசெய்துவிட்டனர். ஆண்களுக்கு ஒரு அவமானமென்றால் தாங்குமா தமிழ்னெஞ்சம்.

கடவுளை வம்பிற்க்கிழுக்கிறார், ஏன் கிருஸ்த்துவக் கடவுளையோ, இஸ்லாமியக் கடவுளையோ தன் கவிதையில் கொண்டுவரக்கூடாது என்று கேட்டால்
அடிப்படையில் கிருஸ்த்துவத்திலோ, இஸ்லாத்திலோ கடவுள்களுக்கு குடும்பமோ, அதுபோன்ற ஒரு பிணைப்போ இருப்பதாய் எங்குமே சொல்லப்படவில்லை. நம் கடவுள்களில்தான் கணவன்,மனைவி, அண்ணன் தம்பி,அண்ணன் மகன்கள், தம்பி மகன்கள்,இருதாரம் அவர்களுக்குள் EGO என ஒரு தமிழ் படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களும் நிரைந்திருக்கிறது. கிருஸ்த்துவத்திலும், இஸ்லாத்திலும்கூட சில் குரல்கள் அவர்களுக்குள்ளிருந்தே அவ்வப்போது எழத்தான் செய்கிறது. தலையில் முடியில்லாத அண்ணனையும், தொப்பைபெருத்த அப்பாவையும்தான் யேய்.. சொட்ட உனக்கெதுக்கு சீப்பு என்றோ,யப்பா இந்த போனை கொஞ்சம் ஸ்டெண்டுல வெச்சுக்கவா என்று அவர் தொப்பையை தடவியபடியோ இயல்பாய் இதமாய் வம்பிற்கு இழுக்கமுடியும். இதை வம்பு என்றுகூட சொல்லமுடியாது ஆழ்ந்த அன்யோன்யம் என்றுதான் கொள்ளவேண்டும்.  இப்படியான அன்யோன்யம் தமிழ் கவிதைக்கொன்றும் புதிதல்ல.ஆண்டாள் பாசுரத்திலிருந்து அபிராமிஅந்தாதிவரை பார்கமுடியும்.இந்த அன்யோன்யத்தை பககத்துவீட்டுக்காரரிடம் காட்டிப்பாறேன் என்பது வீண் வாதம்.

இக்க‌விதையில் ப‌குத்தறிவிற்குப்புர‌ம்பான‌ வார்த்தைக‌ளோ, க‌ருத்தோ ஏதுமில்லை என்வே இக்க‌விதையை நீக்க‌முடியாது என நாத்திக‌வாத‌த்திற்கும்,ப‌குத்த‌றிவுவ‌த‌த்திற்கும் புகழ்பெற்ற நம் திராவிட பாரம்பரியமும்,அப்பின்னனியுள்ள குடுபத்த‌யாரிப்பில் வெளிவ‌ந்திருக்கும்பட்ச்ச‌த்தில் அக்குடுபத்திலிருந்தோகூட எவருமே குர‌ல் கொடுக்காத‌து சற்று உருத்த‌லாய்த்தான் உள்ள‌து. இதற்குப்பின்னாலும் அரசியலா?

Comments

Post a Comment