06-05-12 நீயா நானாவில் பெண்கள் கிண்டலடிக்கப்படுவதற்கும் உடல்ரீதியான சீண்டல்களுக்கு ஆளாகப்படுவதற்கும் அவர்களின் நவநாகரீக ஆடையும் ஒரு காரணமா? என்ற விவாதத்தில் கவிஞர் குட்டி ரேவதியை பார்க்கமுடிந்தது.
இந்த கேள்விக்கு ஆண்கள் அத்தனை பேரும் ஆமாம்னுதான் சொன்னாங்க. ஒரு டாக்டர் உட்பட. அவர் சொன்னவிதம் அவர் எடுத்துவைத்த உதாரணங்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் அவர் வாதத்திற்கு துணைநின்றாலும் அதை குட்டி ரேவதி மிகத்தீவிரமாக மறுத்தடோடல்லாமல் இவ்வாறான கணக்கெடுப்புக்கள் மக்கள் மனதில் ஒரு பொது புத்தியை ஏற்படுத்தவேண்டி அரசு மற்றும் நிறுவனங்களாள் மேற்கொள்ளப்படும் சூழ்ச்சி என்பதையும் சுட்டிக்காட்டியது, புள்ளிவிவரங்களுக்குப பின்னால் பல பெரும்புள்ளிகள் இயங்குவதை புரிந்துகொள்ள முடிந்தது.
பெண்கள் பாலியல் சீண்டலுக்கும் வன்முறைக்கும் ஆளாகக்கூடிய காரணத்திற்கு நிகழ்ச்சியில் ஒருவர் மட்டும் நவநாகரீக உடையணியும் பெண்களை பார்க்கநேரும் "நபர் சாதகமான மனநிலையில் இல்லையென்றால் அது sexual harassment க்கு இட்டுச்செல்லும்" என்று அனைவரும் ஏற்றுக்கொள்ள்க்கூடிய ஆனால் எவருமே சுட்டிக்காட்டாத விஷயத்தை சொன்னார். அதை அரங்கத்திலிருந்தவர்களேகூட கண்டுகொள்ளவில்லை. இந்த வரிகளுக்குப்பின்னால் சமூகத்தில் பொறுப்புமிக்க இடத்தில் சில பொறுக்கிகளும் மனநோயாளிகளும் இருந்துகொண்டு பெண்களைப்பற்றிய கொச்சையான மதிப்பீடுகளை ஏற்படுத்தும் விதமாய் படம் எடுப்பதும் பாடல் வரிகளை எழுதுவதும், அறிக்கைவிடுவதையும் செய்யவிட்டுவிட்டு அதை ஊடகங்கள் மற்றும் இளைஞர்கள் ஆதர்ஷ்யமாய் கருதும் நாயகனின், தலைவனின் மூலம் பரவச்செய்து அதனால் பெரும் ஆதாயமும் அடைந்தபின் அவர்களைத்தொடரும் அப்பாவி தொண்டனய் ரசிகனய்மட்டும் குறை சொல்லிக்கொண்டிருப்பது எந்தவகையில் நியாயமாகும் என கேட்கநினைத்திருப்பார் என்று தோன்றுகிறது.
மொத்தத்தில் குட்டிரேவதி சொன்னதைப்போல் இந்தவிவாதத்தை அடுத்த கட்டத்திற்கு அல்லது ஆழத்திற்கு இட்டுச்செல்லக்கூடிய கணம் "சாதகமான மனநிலையில் இல்லையென்றால் அது sexual harassment க்கு இட்டுச்செல்லும்" என்ற வரிகளில் இருந்த்தாய் நான் உணர்கிறேன்.
Comments
Post a Comment