தாய்க்குலமே ஜாக்கிறதை!


சென்னையின் மிகப்பரபலமான குழந்தைகள் நல மருத்துவமனை வாசலில் மார்கழிமாத பெருமாள் கோயில்போல் பலவிதமான காலணிகள் குவிந்துகிடந்தன. மருத்துவமணைக்குள் காலணிகள் போட்டுகிட்டுபோனா சுகாதாரக்கேடுவரும் என்பதால் இந்த ஏற்பாடாம். சீ.எம் ரேஞ்சுக்கு யாராச்சும் வந்தாமட்டும் செறுப்பு போட்டுகிட்டு போகலாம் மற்றபடி No. நாம என்ன சீ.எம்மா? எவனாவது மாத்தி போட்டுகிட்டு போய்டப் போறாங்கன்ற பயம் இல்லை ஆனா  ஷூவை கழட்டிட்டா  சாக்ஸ் நாத்தம் அடிக்குமோன்னுதான் பயம் என்னசெய்ய வேரவழியில்லையே. வரவேற்பறை 6 மாதத்திலிருந்து 6 வயது வரையினான குழந்தைகளாளும் இருபது வயதிலிருந்து அறுபது வரையிலான பெற்றோர்களாலும் நிரைந்திருந்தது. அறையின் சுவர்முழுதும் குழந்தைகளுக்கான மருந்துகளையும் மற்ற போருள்களையும் தயாரிக்கும் நிறுவனங்களின் விளம்பரப் பிரதிநிதிகளாய் குழந்தைகளின் அழகழகான படங்கள் தொங்கிக்கொண்டிருந்தன. குறிப்பாய் எங்க கம்பனி பேபி பௌடர் விளப்பர குழந்தைதான் எல்லார் மனதையும் கொள்ளையிடுவதாய் இருந்தது. எப்படித்தான் இந்த குழந்தைகள்மட்டும் இவ்வளவு அழகா இருக்குதுங்களோ என சிலர் அகத்தில் ஏங்குவது முகத்தில் அப்பட்டமாய் வெளிப்பட்டது.

வந்திருக்கும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பிரச்சனையோடு வந்திருந்தாலும் ஒவ்வொருத்தரும் தங்கள் குழத்தைக்கு எது கொடுக்கலாம், கொடுக்கக்கூடாதுன்னு டாக்டர்கிட்ட கேட்பதைவிட பக்கத்துல இருபவர்களிடம்தான் அதிகம் கேட்டுக்கொண்டிருந்தனர். அவுங்க என்ன கொடுக்கிறாங்களோ அதையேதான் தன் குழந்தைக்கும் குடுக்கனுமோ இல்லைன்னா நம்ம குழந்தை வளர்ச்சியில் பின்தங்கிடுமோன்னு பயப்படுறாங்க. முன்னெல்லாம் குழந்தை வளர்ப்பு இவ்வளவு கெடுபிடி நிறைந்ததாய் இருக்கவில்லைன்னு நினைக்கிறேன் நாலுபுள்ளய பெத்துக்குவாங்க, தங்களுக்கு நல்லதுன்னு தெரிஞ்சத செய்வாங்க – முடிஞ்சத கொடுப்பாங்க. அந்த நாலும் நாலுவிதமான நல்லது கெட்டதுகளை தெரிஞ்சிகிட்டு நாலுவிதமா வளரும். ஆனா இப்போதய பெற்றோர்கள் ஒன்னோ ரெண்டோ பெத்துக்கிறாங்க அந்த ரெண்டையுமேகூட சூப்பர் குழந்தைகளாத்தான் வளர்க்க விரும்புகிறார்கள். ஒவ்வொருத்தரும் தங்கள் குழந்தைகளை எல்லாத்திலுமே தி பெஸ்ட்டுதான் தன் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டும் அல்லது கொடுக்கவேண்டும்ன்னு நினைப்பதால் எல்லா குழந்தைகளுமே ஒரே மாதிரி வளக்கப்படுகிறது. கிட்டத்தட்ட பிராய்லர் கோழிகளை போலத்தான். இன்றைய நிறுவனமயமாக்கப்பட்ட சூழலும் அதைத்தான் விரும்புகிறது. ஒவ்வொரு நிறுவனமும் தங்கள் தயாரிப்புக்கள்தான் No1 என மக்கள் மனதில் ஏற்றுவதற்கு பிரம்ம பிரயத்தனம் செய்கின்றன. அதற்காக அவர்கள் செய்யும் செலவுகள் பயனீட்டாளர்கள் தலையில் விலையாய் வந்து விடிகிறது. இதற்கிடையில் தொழில் போட்டியும் லாப வெறியும் எந்த எல்லைக்கும் போகவைக்கிறது.

அவ்வளவு ஏன் குழந்தைகள் அழகுசாதன தயாரிப்புகள்ல எங்க நிறுவனம்தான் No1. ஒரு குழந்தை பொறந்தா அம்மா அப்பாவுக்கு அப்பறம் அதிகமா சந்தோஷப்படுவது எங்க நிறுவனம்தான்னு கிண்டலே பண்ணுவாங்கனா பாத்துக்கங்களேன். ஆனா எங்க நிறுவனத்தயாரிப்புக்களில் குழந்தைகள் பவுடர் தயாரிக்க நச்சுத்தன்மை வாய்ந்த எதிலின் ஆக்சைடு பயன்படுத்தித்தான் ஸ்டெரிலைஸ் செய்வார்கள் இதனால் குழந்தைகளின் சருமத்திற்கு பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது. இது தெரிந்தும் எங்க நிறுவனம் அதை தொடர்ந்து செய்துகிட்டேதான் இருந்திருக்கு. அதைத்தான்  டாக்டர்களும் சிபாரிசு செய்கிறார்கள் அல்லது செய்வதாய் விளம்பரப்படுத்துகிறார்கள். மக்களும் அதை நம்பி வாங்கறாங்க.  இதுபோலதான் மோசமான பல தயாரிப்புகளும் No1 என்ற அதீத விளம்பரத்தால் அத்துமீறிக்கொண்டிருக்கின்றன முடிந்தவரை இயற்கை சாதனங்களையே பயன்படுத்துவது பாதுகாப்பு. இதையெல்லாம் நான் இங்க இருக்கும் யாரிடமும் சொல்லமுடியாது மனசுல நினைச்சுக்கலாம் அவ்வளவுதான். சரி டாக்டர் என்னை கூப்பிட்டுட்டார் எங்க தாயரிப்புக்களை மேலும் அதிகமாக பரிந்துரைக்கச்சொல்லி கேட்கவேண்டும். அதற்கு அவருக்கு தனியான கவனிப்பும் உண்டு. அப்ப நான் கிளபறேங்க முடிஞ்சா வேறு சந்தர்பத்தில் சந்திக்கலாம்.

செய்தி: பிரபல ஜான்சன் அன்ட் ஜான்சன் நிறுவனத்தின் முலுந்த் தொழிற்சாலையில் அழகுசாதன பொருட்களை தயார் செய்யும் உரிமத்தை உணவு மற்றும் மருந்து நிர்வாகம் சஸ்பெண்ட் செய்து வைத்துள்ளது. குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை நச்சுத்தன்மை வாய்ந்த எதிலீன் ஆக்சடை கொண்டு ஸ்டெரிலைஸ் செய்யப்படுவதால் பவுடரில் நச்சுத்தன்மை கொண்ட பொருட்கள் இருந்துள்ளன.

புலம்பல்: அப்போ இவ்வளவு நாளா தயாரிச்சத என்ன செய்யபோறங்க இவ்வளவு நாளா உபயோகப்படுத்தினவங்க இனியும் உபயோகப்படுத்தப்போறவங்க  நிலை என்னனனு யாரு யோசிக்கிறாங்க. No1 என்று சொல்லிக்கொள்ளும் மற்றும் டாக்டர்களாளேயே பரிந்துறைக்கப்படும் நிறுவனங்க்களின் சாதனங்களே இந்த லட்சணம் என்றால் யார் யாரோ சொல்றங்கன்னு எதைஎதையோ வாங்கி உபயோகிப்பவர்களின் நிலை ? 

Comments

  1. மருந்துப் பொருட்களின் தரத்தை விட இன்றைய மக்களின் மனோபாவங்கள், விருப்பங்கள் தான் அபாயகரமானதாக உள்ளது.

    மொட்டைத்தலை என்றால் தடவிப் பார்க்கத் தானே தோன்றும்

    ReplyDelete
  2. I really don't understand why the suspension was given. All that was required is an advisory to include testing for residual gas in the finished product. This suspension move is unfair and I presume ulterior motives. The sterilization using Ethylene Oxide is not new and is widely used. Testing for residual gas was not included in the process, that was the error. Unnecessary procedure initiated against J&J.

    ReplyDelete
  3. இன்றைக்கு விளம்பரங்களுக்கு குழந்தைகள் கூட அடிமை... கொடுமை...

    ReplyDelete
  4. டாக்டர்களாளேயே பரிந்துறைக்கப்படும் நிறுவனங்க்களின் சாதனங்களே இந்த லட்சணம் என்றால் யார் யாரோ சொல்ற...................... கொடுமை கொடுமை கொடுமை

    ReplyDelete

Post a Comment